Header Ads

  • சற்று முன்

    கைவிடப்பட்ட செல்லப் பிராணிகளுக்கு உணவளித்து வரும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை


    வீதிகளில் ஆதரவின்றி சுற்றித் திரியும் நாய்கள், கால்நடைகள், உடல்நலம் பாதித்த விலங்குகளுக்கு, உரிமையாளர்களால் கைவிடப்பட்ட செல்லப் பிராணிகளுக்கு உணவளித்து வரும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை

    வீதிகளில் ஆதரவின்றி சுற்றித் திரியும் நாய்கள், கால்நடைகள், உடல்நலம் பாதித்த விலங்குகளுக்கு, உரிமையாளர்களால் கைவிடப்பட்ட செல்லப் பிராணிகள் ஆகியவற்றுக்கு அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளையினர் உணவு மற்றும் பாதுகாப்பு வழங்கி வருகின்றனர்.

    இது குறித்து அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார், வழக்கறிஞர் சித்ரா விஜயகுமாருடன் பேசுகையில்,  ஆதரவற்ற செல்லப் பிராணிகள் மற்றும் கால்நடைகளுக்கும் பல ஆண்டுகளாக உணவு வழங்கி வருகிறோம். வீதிகளில் ஆதரவின்றி சுற்றித் திரியும் நாயினங்கள், மற்றும் கால்நடைகள், உரிமையாளர்களால் கைவிடப்பட்ட செல்லப் பிராணிகள் ஆகியனவற்றை பராமரிக்க விலங்கின ஆர்வலர்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் முயற்சி எடுத்து வருகின்றனர்.

    திருச்சி புத்தூர் பகுதியில்  உணவு மற்றும் பாதுகாப்பு வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில்  உணவின்றி சிரமப்படும் நாயினங்கள் மற்றும் கால்நடைகள் ஆகியவற்றிற்கு உணவு அளிக்கவும், உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை தேவைப்படும் ஆதரவற்ற கால்நடைகள் மற்றும் பிராணிகள் நலன் பேண முயற்சி மேற்கொண்டு வருகிறோம். இதற்கென பிரத்யேகமாக உணவு மற்றும் குடிநீருக்கான தொட்டிகள் வைத்து உணவளித்து வருகிறோம் மேலும் விலங்கின ஆர்வலராக இருந்து தெருவோர நாய்கள் குட்டி வளர்க்க விருப்பமுள்ளவருக்கு நாட்டு இன  நாய்க் குட்டிகளும் வழங்கி வருகிறோம் என்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad