Header Ads

  • சற்று முன்

    ராயபுரம் ஜீ.ஏ.ரோடு அருள்மிகு ஶ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோயில் 17ஆம் ஆண்டு பிரம்மோற்சவம்



    சென்னை ராயபுரம் ஜீ.ஏ.ரோடு வண்னையம்பதி பகுதியில் அமைந்துள்ள  அருள்மிகு ஶ்ரீ காமாட்சி அம்மன் திருக்கோயில் 17ஆம் ஆண்டு பிரம்மோற்சவ பெருந்திருவிழா இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது.

     பிரம்மோற்சவதத்தை முன்னிட்டு பக்தர்கள் பால்குடம் ஏந்தி திருவீதி உலா வந்தனர். இந்த நிகழ்ச்சியினை ஶ்ரீ.வீராஸ் உரிமையாளர் எஸ்.வி பாலசுப்ரமணி மற்றும்  பீ.அமுதா ஆகியோர்  தொடங்கிவைத்தனர். இதில் 200க்கும்  மேற்பட்ட பக்தர்கள் பால் குடம் எடுத்து வீதி உலா வந்து அம்மனுக்கு பாலபிஷேகம் செய்யபட்டது.

    இந்த விழாவில்  24மனை தெலுங்கு செட்டியார் நண்பர் குழு தலைவர் வி.ஆர் கணேசன்,செயலாளர் எஸ்.கோவிந்தராஜ்,பொருளாளர் வி.பி.ஜெயசந்திரன், துணை தலைவர் ஜி.செல்வராஜ் துணை செயலாளர் ஜி.ரவிச்சந்திரன் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள்  மற்றும் திரளான பக்தகோடிகள் கலந்து கொண்டு அருள்மிகு  ஸ்ரீ காமாட்சி அம்மன் அருளை பெற்று சென்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad