உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு நேச்சுரோபதி மருத்துவ முகாம்..
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அமைப்பு நடத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கான நேச்சுரோபதி மருத்துவ முகாம்..
ராணிப்பேட்டை மாவட்டம்,வாலாஜா பூண்டி மகான் ஆசிரமத்தில் நடைபெற்ற.நேச்சுரோபதி மருத்துவ முகாமை ராணிப்பேட்டை சார் ஆட்சியர் இளம்பகவத் தொடங்கி வைத்தார். நேச்சுரோபதி சிகிச்சையின் மகத்துவத்தைப் பற்றியும் அதனை பின்பற்றுமாறு விளக்கவுரை அளித்தார் .உடன் வாலாஜா வட்டாட்சியர் பாக்கியநாதன் இயற்கை மருத்துவ சிகிச்சை முறைகளைப் பின்பற்றும் அறிவுரை வழங்கினார், சிறப்பு அழைப்பாளராக அக்பர்ஷரீப், பொன் சரவணன், குமரன் ரவிசங்கர், Dr.ஆதித் WG.முரளி வாலாஜா அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் இயங்கி வரும் நேச்சுரோபதி மற்றும் யோகா துறையின் டாக்டர் சசிரேகா குழுவினர் மாற்றுத் திறனாளிகளுக்கு நேச்சுரோபதி சிகிச்சை அளிக்கப்பட்டது. நீராவி பிடித்தல், நறுமண சிகிச்சை, அக்குபிரஷர், சிகப்பு ஒளி கதிர் சிகிச்சை, மண் சிகிச்சை, மினி மசாஜர் மற்றும் அனைவருக்கும் நேச்சுரோபதி கிட் வழங்கப்பட்டது.
உள்ளடக்கம்-- *நறுமணத் தைலம் *நோய் எதிர்ப்பு சக்தி பவுடர் *தூதுவளை+துளசி பவுடர் *மூலிகை மண் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
ஒருங்கிணைந்த மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்..
கருத்துகள் இல்லை