"புரேவி" புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விளாத்திகுளம் பகுதி மீனவர்கள் 600க்கும் மேற்பட்ட நாட்டு படகுகளை கரைக்கு கொண்டுவந்து பத்திரப் படுத்தினர்!
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள வேம்பார், பெரிய சாமிபுரம், கீழவைப்பார், சிப்பிகுளம் உள்ளிட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் தங்களுக்கு சொந்தமான 600க்கும் மேற்பட்ட நாட்டு படகுகள் மற்றும் 57 விசைப்படகுகளை புயலில் இருந்து சேதமடையா வண்ணம் மீனவர்கள் தானாக முன்வந்து பாதுகாக்கும் பொருட்டு கரைக்கு எடுத்து வந்து பத்திரப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் விசைப்படகுகள் வழக்கமாக ஒரு நங்கூரத்தின் மூலம் நிறுத்தப்படும் ஆனால் புயல் எச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதல் நங்கூரங்களின் மூலம் விசைப் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மேலும் தமிழக அரசு அறிவுறுத்தலின்படி மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை என்று மீனவர்கள் தெரிவித்தனர்.
கருத்துகள் இல்லை