Header Ads

  • சற்று முன்

    அனாதையாக சுற்றித் திரிந்த முதியவரை குடும்பத்தாரிடம் ஒப்படைத்த திருச்செந்தூர் கோவில் காவல் நிலைய போலீசார்

    திருச்செந்தூர் கோவில் பகுதியில் கடந்த இரண்டு வருடங்களாக ஆதரவில்லாமல் அனாதையாக சற்று காது கேளாமலும், சற்று வாய் பேச முடியாமலும் ராமசாமி (85) என்ற முதியவர் சுற்றித்திரிந்துள்ளார்.

    இந்நிலையில் திருச்செந்தூர் கோவில் காவல்நிலைய ஆய்வாளர் திரு. ஞானசேகரன், உதவி ஆய்வாளர் திரு. சுவாமி, தலைமை காவலர் திரு. வாசன் ஆகியோர் இன்று  (25.11.2020) அவ்வழியாக ஆதரவின்றி சுற்றித் திரிந்த அந்த முதியவரை மீட்டு, அவரது மகனான திருநெல்வேலி சங்கர்நகர் பழைய காலனியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவருக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டு, அவரை திருச்செந்தூர் உதவி காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் வரவழைத்து உதவி காவல் கண்காணிப்பாளர் திரு. ஹர்ஷ் சிங் அவர்கள் முன்னிலையில் அந்த முதியவர் பத்திரமாக அவரது மகன் சுப்பிரமணியனிடம் ஒப்படைதத்தனர்.

    மேற்படி கடந்த இரண்டு வருடங்களாக ஆதரவின்றி அனாதையாக சுற்றித்திரிந்த முதியவரை அவரது குடும்பத்தாரிடம் ஒப்படைத்த திருச்செந்தூர் கோவில் காவல்நிலைய போலீசாரை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் பாராட்டினார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad