Header Ads

  • சற்று முன்

    காவல் துறை சார்பில் திருநங்கைகளுக்கு ஆலோசனை


    கோவில்பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த திருநங்கைகளுக்கு காவல் துறை சார்பில் செவ்வாய்க்கிழமை அறிவுரை வழங்கப்பட்டது.

    கோவில்பட்டி காவல் துணைக் கோட்டத்துக்கு உள்பட்ட கோவில்பட்டி, கயத்தாறு, கழுகுமலை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த திருநங்கைகளை காவல் துணைக் கண்காணிப்பாளர் கலைகதிரவன் தனது அலுவலகத்துக்கு அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.

    அப்போது, அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் திருநங்கைகளான தங்களுக்கு வீடுகள் மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கு ஏதுவாக பால்பண்ணை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும், தாங்கள் ஒவ்வொருவரும் சுயதொழில் செய்வதற்கு ஏதுவாக சுயதொழிலைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

    மேலும், சுயதொழில் செய்வதற்கு ஏதேனும் உதவிகள் தேவைப்பட்டால் தாங்கள் கோரிக்கை மனு அளிக்கும்படியும், தங்கள் கோரிக்கைக்கு தீர்வு காண காவல் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்படும் அல்லது தங்கள் கோரிக்கை குறித்து மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அரசுக்கு தெரிவித்து தங்களுக்கு வேண்டிய அனைத்து உதவிகளும் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    எனவே, தாங்கள் பேருந்து நிலையங்களிலோ, அல்லது பேருந்து நிற்கும் இடங்களிலோ பேருந்தில் ஏறி பயணிகளிடம் பணம் கேட்பதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது. 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad