Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி அருகே புதிய வீட்டில் கட்டுமான பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தொழிலாளி மின்சாரம் தாக்கி பலி

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி ஆனார். விருதுநகர் மாவட்டம் ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள புல்லா கவுண்டம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முருகேசன் மகன் சரவணன் வயது 28 இவர் கோவில்பட்டி சண்முக சிகாமணி நகரில் நாகலிங்கம் என்பவர் புதிதாக வீடு கட்டுதான பணியில் பணியாற்றி வருகிறார் 

    இந்த வீட்டில் புதிதாக கட்டப்பட்ட சுவற்றை தண்ணீர் கொண்டு ஈரப்படுத்தும் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது திடீரென்று சுவற்றிலிருந்து மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே சரவணன் பலியானார் .உடனே தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு வந்த கோவில்பட்டி மேற்கு காவல் இன்ஸ்பெக்டர் அய்யப்பன் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். இது குறித்து மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர். இறந்து போன சரவணனுக்கு கற்பகசெல்வி என்ற மனைவியும்  நந்துஜா, அட்விகாபானு என்ற இரு பெண் குழந்தைகள் உள்ளன.

    கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad