Header Ads

  • சற்று முன்

    ராணிப்பேட்டை மாவட்டம்பாரத மிகு மின் நிறுவனம் எஸ்சி எஸ்டி தொழிற்சங்க அமைப்பினர் தொழிற்சாலை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்



    ராணிப்பேட்டை மாவட்டம் ராணிப்பேட்டை அடுத்த முகுந்தராயபுரத்தில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பாரத மிகு மின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் தொழிற்சாலை வளாகத்தில் இன்று உத்தர பிரதேச மாநிலத்தில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்ட 19 வயது சிறுமியின் மரணத்திற்கு நீதி கேட்டு எஸ்சி எஸ்டி தொழிற்சங்க அமைப்பினர் தங்களது குடும்பத்தினருடன் தொழிற்சாலை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உடனடியாக தன்னுடைய முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கோரி கண்டன கோஷங்கள் எழுப்பினர்

    மேலும்  சிறுமியின் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தலித் சிறுமியின் கொலை வழக்கில் நீதி கிடைக்க உத்தரபிரதேச மாநில அரசை குடியரசுத்தலைவர் டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். மேலும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி தங்களது குடும்பத்தினருடன் கண்டன கோஷங்கள் எழுப்பினர் .இந்த போராட்டம் காரணமாக தொழிற்சாலை வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்த போராட்டத்தில் தொழிற்சங்கத்தை சேர்ந்த இந்திரன் ,குலசேகரன், சுதாகர் ,ரமேஷ், கண்ணன், மந்திரமூர்த்தி, ரமேஷ், தேவேந்திரன். உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad