Header Ads

  • சற்று முன்

    அ.தி.மு.க. 49 ஆம் ஆண்டு துவக்க விழா!

    சோளிங்கரில் அதிமுக சார்பில் அதிமுக 49 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஜி.சம்பத் தலைமை தாங்கினார். சோளிங்கர் கிழக்கு ஒன்றிய செயலாளர் AL விஜயன் முன்னிலை வகித்தார். நகரச் செயலாளர் ராமு அனைவரும் வரவேற்றார்.



    இந்நிகழ்ச்சிக்கு சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் ஜி.சம்பத் தலைமை ஏற்று  சோளிங்கர்  பேருந்து நிலையத்திலுள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா அவர்களின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார் . பின்னர் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கினார்கள்.

    இந்நிகழ்ச்சியில் இனிவரும் அனைத்து தேர்தல்களில்  அதிமுக வெற்றி பெறச் செய்ய அனைவரும் அயராது பாடுபடவேண்டும் என்று சட்டமன்ற உறுப்பினர் கேட்டுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் சோளிங்கர் மேற்கு ஒன்றிய செயலாளர் பெல் .கார்த்திகேயன் ஒன்றிய அவைத்தலைவர் ஏ எல் சாமி ,ஒன்றிய அம்மா பேரவை செயலாளர் நரசிம்மன் ,பால் கூட்டுறவு சங்கத் தலைவர் தட்சிணாமூர்த்தி ,மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை துணை செயலாளர் மணிகண்டன் ,மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணைச் செயலாளர் சதீஷ், கழக  நிர்வாகிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். 

    ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்



    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad