Header Ads

  • சற்று முன்

    சோளிங்கர் அரசு மருத்துவமனைக்கு தேசிய மத்திய தர குழு ஆய்வு செய்து மருத்துவமனைக்கு தேசிய தரச்சான்று

    இராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் கடந்த 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24, 25 ,26 ஆகிய தேதிகளில் தேசிய மத்திய தர குழு ஆய்வு செய்து மருத்துவமனைக்கு  தேசிய தரச்சான்று வழங்கப்பட்டது. அதற்கான சான்றிதழை மாவட்ட ஆட்சித் தலைவர் ச. திவ்யதர்ஷினி இ.ஆ.ப அவர்களிடம் மருத்துவமனை அதிகாரிகள், ஊழியர்கள் வழங்கி  வாழ்த்து பெற்றனர். 

    இந்த தரச்சான்று பெறபட்டதன் மூலம் மருத்துவமனைக்கு ஒரு ஆண்டுக்கு 7 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் வீதம் ஒவ்வொரு ஆண்டும் தொடர்ச்சியாக மூன்று ஆண்டுகள் வழங்கப்படும். மருத்துவ மேம்பாட்டுக்கு இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் சோளிங்கர் மருத்துவமனையை சுற்றியுள்ள பொதுமக்களுக்கு தரமான மருத்துவ சேவையை திருப்திகரமாக மேம்படுத்தப்படும் . உடன் மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் யாஸ்மின் , தலைமை மருத்துவர் (பொறுப்பு) R.இளங்கோவன் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad