Header Ads

  • சற்று முன்

    தனியார் கல்லூரி மாணவி காணவில்லை என தகப்பனார் மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார்

    ராணிப்பேட்டை மாவட்டம் மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களிடம் பெரிய தகரகுப்பம் கிராமத்தை சேர்ந்த  ராமு என்பவர் புகார் மனு அளித்துள்ளார் அப் புகாரில் குறிப்பிட்டுள்ளதாவது... எனது மகள் அறிவுமதி அன்பு  என்பவரின் மகன் தமிழரசன் கடத்தியது சம்பந்தமாக புகார் மனு மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களிடம் நேரில் சந்தித்து அளித்துள்ளார் இதுகுறித்து புகாரில் குறிப்பிட்டுள்ளதாவது நான் பெரிய தகர குப்பம் கிராமத்தில் வசித்து  வரும் நரசிம்மன் மகன் ராமு எனக்கு இரு மகள்கள் உள்ளனர் என்னுடைய இளைய மகள் அறிவுமதி  இரண்டாம் வருடம் தனியார் கல்லூரியில் படித்து வருகிறார் கடந்த 28 /8 /2020 வெள்ளி முதல் காணவில்லை நானும் எனது மனைவியும் தேவதானத்தில் நடைபெற்ற உறவினர் திருமணத்திற்கு சென்று விட்டு திரும்பி வந்து பார்த்தோம் எங்கள் மூத்த மகள் தமிழினி எங்கள் வீட்டின் பின்புறம் உள்ள தோட்டத்திற்கு சென்று திரும்பி வந்து பார்த்தபோது தங்கை அறிவுமதி வீட்டில் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்ததாக எங்களிடம் கூறினார் பின்பு விசாரித்துப் பார்த்ததில் அன்பு என்பவரின் மகன் தமிழரசன் எனது மகளை காரில் கடத்தி சென்று விட்டதாக எனது வயதான அம்மா கூறினார் நாங்கள் எல்லா இடங்களிலும் தேடி பார்த்தும் கிடைக்கவில்லை நாங்கள் வாலாஜா  காவல் நிலையத்தில் எனது மகள் காணவில்லை என்று புகார் கொடுத்துள்ளோம் இன்றைய தேதி எந்த ஒரு தகவலும் இல்லை ஆதலால் ராணிப்பேட்டை மாவட்ட கண்காணிப்பாளர்  மயில்வாகனன் அவர்களிடம் நேரில் சந்தித்து புகார் அளித்துள்ளோம்.  மாவட்ட கண்காணிப்பாளர் அவர்கள் தனிப்படை அமைத்து விரைந்து காணாமல் போன எனது மகளை கண்டுபிடித்து தருவதாக கூறியுள்ளார்..

    மேற்படி புகார் குறித்து மாவட்ட கண்காணிப்பாளரிடம் கேட்ட தகவல் படி உடனடியாக ஆய்வாளர் தலைமையில் ஒரு குழு அமைத்து காணாமல்போன  கல்லூரி மாணவியை கண்டுபிடித்து தருவதாக கூறியுள்ளார்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad