Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி அருகே ரயிலில் அடிபட்டு இறந்த அடையாளம் தெரியாத இளைஞர் சடலத்தை ரயில்வே போலீஸார் நேற்று மீட்டனர்.

    கோவில்பட்டி - குமாரபுரம் ரயில்வே நிலையத்திற்கு இடைபட்ட மந்தித்தோப்பு கிராமத்திற்கு உள்பட்ட பெத்தேல் ஹோம் பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாளம் அருகே இறந்த நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக மந்தித்தோப்பு கிராம உதவியாளர் சு.மாரியப்பன் தூத்துக்குடி ரயில்வே போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளார். அதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற ரயில்வே உதவி ஆய்வாளர் பெருமாள் தலைமையில் போலீஸார் சென்று, சடலத்தை கைப்பற்றி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இவர் ரயிலில் அடிபட்டு இறந்தாரா, அல்லது ரயிலில் பயணம் செய்யும்போது தவறி விழுந்து இறந்தாரா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.சுமார் 35 வயது மதிக்கத்தக்க, கருப்பு நிறம் கொண்ட அவர், ஊதா மற்றும் காப்பி நிறத்தில் கட்டம்போட்ட லுங்கியும், சிமெண்ட் கலரில் டி-சர்ட், கழுத்தில் மஞ்சள் நிற கயிறு, இடது கையில் மஞ்சள் நிறத்தில் கவரிங் காப்பு ஆகியவை அணிந்திருந்த இவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை.இதுகுறித்து தூத்துக்குடி ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad