Header Ads

  • சற்று முன்

    ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய ஊட்டச்சத்து மாத விழாவில் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

    ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ் (போஷன் அபியான்) தேசிய ஊட்டச்சத்து மாத விழாவினையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி. ச. திவ்யதர்ஷினி இ.ஆ.ப., அவர்கள் அலுவலக வளாகத்தில் ஊட்டச்சத்து மரக்கன்றுகள் நெல்லி, கொய்யா செடிகளை நட்டார்கள்.

    மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி. ச. திவ்யதர்ஷினி இ.ஆ.ப. அவர்கள் பேசியதாவது.... ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சுமார் ஆயிரம் அங்கன்வாடி மையங்களிலும் குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்க இயற்கை முறையிலான காய்கறி தோட்டங்கள் அமைக்க அங்கன்வாடி பணியாளர்கள் ஈடுபட வேண்டும்.

    ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா  ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்கள் திறக்கப்பட உள்ள காரணத்தினால் சத்துணவு சாப்பிடும் அனைத்து குழந்தைகளுக்கும் உலர் உணவுகள் மற்றும் முட்டைகள் வழங்கப்பட்டு வருகின்றன இம்மாதம் முழுவதும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் அங்கன்வாடி பணியாளர்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று ஊட்டச்சத்து குறைபாட்டால் ஏற்படும் தீமைகளை பொது மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்றும் மேலும் நாடகங்கள் தெருக்கூத்துக்கள் ஆகியவற்றின் மூலமும் ஊட்டச்சத்து குறைபாட்டின் அவசியத்தை பொதுமக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் எனவும் ஊட்டச்சத்து உள்ள உணவை உட்கொள்ளும் போது ஏற்படும் நன்மைகளை சமூக வலைதளங்கள் மூலம் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் என தெரிவித்தார்

    மாவட்டத்தில் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத குழந்தைகள் மாவட்டமாக இருக்க சம்மந்தப்பட்ட அலுவலர்கள் போதிய விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்த வேண்டும் என்று கூறினார்

    மேலும் ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சுமார் ஆயிரம் அங்கன்வாடி மையங்களிலும் குழந்தைகளுக்கு சத்தான காய்கறிகள் மூலம் உணவுகளை அளிப்பதற்காக காய்கறி தோட்டங்கள் உடனடியாக அமைக்க வேண்டும் மேலும் பள்ளிகள் கல்லூரிகள் அரசு அலுவலகங்கள் அரசுக்கு சொந்தமான இடங்களில் காய்கறி தோட்டங்களை உடனடியாக அமைக்க ஊட்டச்சத்து பணியாளர்கள் நடவடிக்கை எடுத்து அதில் விளையும் காய்கறிகளை குழந்தைகளுக்கு சத்தான காய்கறிகளை சமைத்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்பள்ளிகள் கல்லூரிகள் ஆகியவற்றில் இயற்கை காய்கறி தோட்டங்கள் அமைக்கப்படுவதால் மாணவர்களும் அதனை பின்பற்றி தங்கள் வீடுகளில் காய்கறித் தோட்டங்கள் அமைக்க ஏதுவாக அமையும் என்றும் ஒவ்வொரு வீடாக அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் ஊட்டச்சத்து பணியாளர்கள் செல்லும்போது சமூக இடைவெளி மற்றும் கிருமி நாசினி தெளித்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திவ்யதர்ஷினி பேசினார்.. அதனைத் தொடர்ந்து அங்கன்வாடி ஊழியர்களுக்கு மரக்கன்றுகளை வழங்கினார். இன்னர் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் (போஷான் அபியான்) தேசிய ஊட்டச்சத்து மாத விழாவில் கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். 

    இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன், திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம் ) திரு. ஜெயராம், மாவட்ட திட்ட அலுவலர் திருமதி.கோமதி, மாவட்ட வழங்கல் அலுவலர் இளவரசி, உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) திரு.குமார் ,நகராட்சி ஆணையாளர்கள், பிற துறை அலுவலர்கள், அங்கன்வாடி அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்து கொண்டனர். 


    ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad