Header Ads

  • சற்று முன்

    பாரதிய ஜனதா கட்சியின் பொறுப்பாளர்கள் மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் மனு அளித்துள்ளனர்

    ராணிப்பேட்டை மாவட்ட பிஜேபி பாரதிய ஜனதா கட்சியின் பொறுப்பாளர்கள் பொதுச் செயலாளர் ஆனந்தன் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு மனு அளித்துள்ளனர் மனுவில் குறிப்பிட்டுள்ளதாவது மாநிலத் தலைவர் முருகன் அவர்களின் ஆலோசனைப்படி விவசாய அணி மாநில தலைவர் கே கே நாகராஜன் அவர்களின் அறிவுறுத்தலின்படி தங்களிடம் விடுக்கும் கோரிக்கை என்னவென்றால் மத்திய பாரதிய ஜனதா அரசாங்கம் செயல்படுத்தி வரும் விவசாயிகள் பயன்பெறும் திட்டமான கிசான் சம்மான் நிதி இதை ராணிப்பேட்டை மாவட்டத்தில் பல ஆயிரம் போலியான நபர்கள் பதிவு செய்து முறைகேடு செய்துள்ளனர் என்பது தெரிய வருகிறது இந்த முறைகேட்டில் ஈடுபடும் மிகப்பெரிய ஊழல் செய்தவர்களை விசாரித்து அவர்களிடமிருந்து தொகையைத் திரும்பப் பெற்று உண்மையான விவசாய பெருமக்களுக்கு இந்த திட்டத்தின் மூலமாக சென்று சேர வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் இவ்வாறு இந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனர் மாவட்ட ஆட்சியர் நேரில் சந்தித்து மனுவை பொதுச் செயலாளர் ஆனந்தன் மற்றும் ராணிப்பேட்டை மாவட்ட விவசாய அணி  தலைவர் ஸ்ரீநாத், நேரில் அளித்தனர் 

    ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad