Header Ads

  • சற்று முன்

    "போலி பட்டா மோசடி செய்த வருவாய் ஆய்வாளர் கைது!!!

    வாலாஜாப்பேட்டை  ஆதிதிராவிடர் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராகவும், அரக்கோணத்தில் சென்னை-கன்னியாகு மாரி தொழிற்தடம் திட்டம் நில சிறப்பு வருவாய் ஆய்வாளராகவும் பணியாற்றிவர் ராஜசேகரன். இவர் கடந்த -2014ஆம்  ஆண்டில் ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கும் திட்டத்தில் 300 பேருக்கு இலவச வீட்டுமனைப் பட்டா  அளிப்பதாகக் கூறி தனிநபரின் நிலங்களுக்கு போலி ஆவணங்கள் தயாரித்து அதை வைத்து கோடிக்கணக்கில் பணம் பெற்றுள்ளார்.

    இதேபோல் வாலாஜாப்பேட்டை ஆதிதிராவிடர்  நல தனிவருவாய் ஆய்வாளராக ராஜசேகரன் பணியாற்றிய போது, ஆதிதிராவிடர் அல்லாதவருக்கும் பட்டா வழங்கியது ஒரு பட்டாவையே 4 பேருக்கு வழங்கி முறைகேடில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. சென்னை-கன்னியாகுமாரி தொழிற்தடம் திட்டம் நில பிரிவு அலுவலகத்தில் அலுவலக உதவியாளர், ஓட்டுநர், ஆவணஎழுத்தர் ஆகிய பணியிடங்களுக்கு பணம் பெற்று பலருக்கு போலி நியமன ஆணையை வழங்கியுள்ளார். தொடர்ந்து முறைகேடுகளில் ஈடுபட்டு

    வந்த அவரை ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி சில மாதங்களுக்கு முன்பு பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார். இந்நிலையில் தலைமறைவாக உள்ள ராஜசேகரனை கைது செய்யக் கோரி மாவட்ட நிர்வாகம் சார்பில் மாவட்டக் காவல்துறைக்கு புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் தலைமறைவாக இருந்த ராஜசேகரனை  போலீசார் கைது செய்தனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad