துரைப்பாக்கத்தில் பரோட்டா சாப்பிட்ட சிறுவன் பலி?
துரைப்பாக்கம், பாரிநகர், ஐந்தாவது தெருவைச் சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் தினேஷ், 12; ஏழாம் வகுப்பு மாணவர்.நேற்று முன்தினம் இரவு, அதே பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில், பிரியாணி, பரோட்டா சாப்பிட்டுள்ளான். சற்று நேரத்தில், வயிற்று வலி ஏற்பட்டுள்ளது.சீவரத்தில் உள்ள, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, வீடு திரும்பினான். நள்ளிரவு மீண்டும் வலியால் துடித்து மயங்கினான். ராயப்பேட்டை மருத்துவமனை துாக்கி சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், தினேஷ் இறந்த தகவலை தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து, துரைப்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.
கருத்துகள் இல்லை