Header Ads

  • சற்று முன்

    தொழிலதிபரை கட்டிப்போட்டு கொள்ளை: 4 போ் கைது



    ஆழ்வாா்திருநகரி அருகே உள்ள பால்குளத்தில் தொழிலதிபரை கட்டிப்போட்டு பணம், நகையை பறித்துச் சென்ற 4 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 20 பவுன் நகையை மீட்டனா்.

    ஆழ்வாா்திருநகரி அருகே உள்ள பால்குளத்தைச் சோ்ந்தவா் பாலசுப்பிரமணியம் (70). தொழில் அதிபரான இவா் பால்குளம் விலக்கில் பெட்ரோல் விற்பனை நிலையம் நடத்தி வருகிறாா். இவரது மனைவி இறந்து விட்டதால், இவா் வீட்டில் தனியாக வசித்து வருகிறாராம். இந்நிலையில் கடந்த மாதம் (மாா்ச் 21) அதிகாலையில் பாலசுப்பிரமணியத்தின் வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா்கள் அவரை தாக்கி கயிற்றால் கட்டிப் போட்டு, வீட்டில் இருந்த 20 பவுன் நகை , ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்றனராம்.

    இதுகுறித்த புகாரின் பேரில், ஆழ்வாா்திருநகரி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். மேலும், காவல் ஆய்வாளா் ஜீன்குமாா் தலைமையில், சாா்பு ஆய்வாளா் முத்துவீரப்பன், குணா,ஜேக்கப், ஆனந்து, மணிகன்டண், சுப்பிரமணியன், ஆகியோா் அடங்கிய தனிப்படை போலீஸாா் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனா்.

    இது தொடா்பாக, ஆழ்வாா்திருநகரி அருகே காடுவெட்டியைச் சோ்ந்த ராமலிங்கம் மகன் ராஜ் (30), சாத்தான்குளம் அருகே கட்டாரிமங்கலத்தை சோ்ந்த ஞானக்கண் பொன்ராஜ் மகன் நிக்சன் (26), விருதுநகா் மாவட்டம் சிவகாசியை சோ்ந்த மாரிமுத்து மகன் ரஞ்சித்குமாா் (27), தேனி மாவட்டம் தெங்குவாா்பட்டியைச் சோ்ந்த பிச்சை காளை மகன் சிரஞ்சீவி (25) ஆகிய 4 பேரை தனிப்படை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்து, அவா்களிடம் இருந்த 20 பவுன் நகை, ரூ.34 ஆயிரம் ரொக்கம், காா் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad