ஆற்காடு வட்டாட்சியர் காமாட்சி அதிரடி தனிநபர் ஆக்கிரமிப்பு நிலத்தை அப்புறப்படுத்தினார்
இராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு வட்டம் திமிரி கிராமம் ஓடை புறம்போக்கு சர்வே எண் 319 , 1.65.0 ஹெக்டேர் பரப்பில் அமைந்துள்ள ஏரிக் கரையை உடைத்து தனிநபர்கள் பல வருடங்களாக ஆக்கிரமிப்பு செய்து கொண்டு, அதில் தென்னை கன்றுகள் வைத்து வளர்த்து வந்த தகவல் அடுத்து ஆற்காடு வட்டாட்சியர் காமாட்சி அவர்களுக்கு தகவல் தெரிவித்ததன் பெயரில் ஆற்காடு வட்டாட்சியர் காமாட்சி அவர்கள் மற்றும் காவல்துறையினர், வருவாய் அலுவலர்களுடன் சென்று பொதுமக்கள் முன்னிலையில் ஜேசிபி இயந்திரத்தின் மூலம் தென்னங்கன்றுகள் அகற்றப்பட்டது. வட்டாட்சியரின் அதிரடி மேலும் தொடர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட செய்தியாளர் சுரேஷ்குமார்..
கருத்துகள் இல்லை