கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே குறுங்குடியில் பட்டாசு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் வட்டம் குறுங்குடி கிராமத்தின் அருகே உள்ள இடைநாறூர் என்ற பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட பட்டாசு உற்பத்தி குடிசைத் தொழிலாக இயங்கி வருகிறது.
இதில் காந்திமதி என்பவரின் பட்டாசு தயாரிப்பு பகுதியில் வெடி விபத்து ஏற்பட்டது அங்கு பணியில் இருந்த 9 பேரும் படுகாயமடைந்தனர். இதில் சம்பவ இடத்திலேயே 5 பேர் பலியான நிலையில் படுகாயமடைந்த 4 பேர் திருச்சி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக அழைத்துச் செல்லப்பட்டனர். அங்கு இருவர் உயிரிழந்த நிலையில், இருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வெடி தயாரிக்கும் குடோன் உரிமையாளர் காந்திமதி மற்றும் அவரது மகள் லதா ஆகிய 2 பேரை சேர்த்து அதே பகுதியைச் சேர்ந்த ராசாத்தி, மலர்க்கொடி,ரெத்னாம்பாள் உள்ளிட்ட மொத்தம் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
விபத்து நடந்த இடத்தில் 9 பேர் பணியில் இருந்து உள்ளனர். அவர்கள் அனைவரும் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஊரடங்கு காலம் முடிந்து நேற்று தான் பணிகளை தொடங்கியுள்ளனர். இந்நிலையில் இன்று கோர விபத்து ஏற்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை