பல்லடத்தில் பெருகும் கூலிப்படையின் அட்டூழியம் !
கட்டிடம் காலி செய்வதில் கழுத்தில் கத்தி வைத்து ஒரு குடும்பத்தினரை மிரட்டி ஜேசிபி இயந்திரம் கொண்டு கட்டிடத்தை இடித்ததால் பரபரப்பு
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் கொசவம்பாளையம் சாலையில் சின்னசாமி மற்றும் ஈஸ்வரமூர்த்தி என்பவர்களுடன் கவிதா என்ற பெண் விலைக்குப் பெற்ற ஒப்பந்த அடிப்படையில் காலதாமத பிரச்சினைகள் ஏற்பட்டு காலி செய்வதில் தகராறு இதில் பத்துக்கும் மேற்பட்ட கூலிப்படையினரை கொண்டு இரவு நேரத்தில் கவிதா குடும்பத்தினரை கழுத்தில் கத்தி உட்பட ஆயுதங்கள் வைத்து கொலை மிரட்டல் விடுத்து ஜேசிபி இயந்திரம் கொண்டு கட்டிடம் இடிக்கப்பட்டு உள்ளது இச்சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மேலும் சின்னசாமி மற்றும் ஈஸ்வரமூர்த்தி ஆகியோரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் இதுபோன்ற சம்பவங்கள் இப்பகுதியில் அடிக்கடி நடப்பது குறிப்பிடத்தக்கது
கருத்துகள் இல்லை