சசிகலா விடுதலையில் திடீர் திருப்பம்
சசிகலா விடுதலையில் திருப்பம் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் விடுதலை ஆவதற்கு சாதிய கூறு இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்த நிலையில் அபராத தொகையான 10 கோடி செலுத்த வேண்டும். அபராத தொகை செலுத்திய பிறகே விடுதலை தேதி அறிவிக்கப்படும் என சிறைத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கின்றனர். தற்போது கொரோனா தொற்று ஊரடங்கு இருப்பதால் இந்த விதிமுறைகள் தளர்ந்த பிறகு விடுதலை ஆனால் அரசியலில் ஈடுபட சரியாக இருக்குமென சசிகலா தரப்பு கருதுவதால் இந்த மாதம் இறுதியில் 10 கோடி ரூபாய் அபராதத்தை செலுத்த சசிகலா முடிவு செய்திருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. செப்டம்பர் மாதம் இறுதிக்குள் வெளிவர வாய்ப்புள்ளதாக சசிகலாவிற்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.
கருத்துகள் இல்லை