Header Ads

  • சற்று முன்

    போலீஸ் ஏட்டுகளுக்கு இனி வாரம் 5 நாள் வேலை


    சேலத்தில், போலீசார் முதல் தலைமை ஏட்டுகள் வரை, இனி, வாரம் ஐந்து நாள் மட்டும் பணிபுரியும் புது நடைமுறை, நாளை முதல் அமலுக்கு வருகிறது. சேலம் போலீசில், அதிக பணிச்சுமையால், மன உளைச்சலில் இருந்து விடுபட ஏதுவாக, புது உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. போலீசார் முதல் தலைமை ஏட்டுகள் வரை பணிபுரிவோர், தொடர்ந்து, ஆறு நாள் வேலை பார்த்தால், ஏழாவது நாள், ஈட்டிய விடுப்பு எடுத்து கொள்ளலாம். விடுமுறைக்கு மாறாக, பணியாற்றினால், 250 ரூபாய் ஊதியம் பெறலாம். இதுதவிர, வாரம் ஒரு நாள் குடும்பத்துடன் இருக்க, கொரோனா ஓய்வு பெயரில், ஒரு நாள் விடுமுறைக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது. அதன்மூலம், ஏட்டுகள் வரை, இனி, வாரத்தில், ஐந்துநாள் மட்டும் பணிபுரிவர். சிறப்பு எஸ்.ஐ.,க்கள், தொடர்ந்து, 14 நாள் பணிபுரிந்தால், அவர்களுக்கு, 15ம் நாளில், ஈட்டிய விடுப்பு எடுத்துக்கொள்ளலாம். மற்றபடி, வேறு எந்த சலுகையும், அவர்களுக்கு கிடையாது. போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், 'மைக்' மூலம், நேற்று, இந்த உத்தரவை பிறப்பித்தார். நாளை, முதல், விடுமுறை அறிவிப்பு அமலுக்கு வருகிறது. அதேபோல், புறநகர் பகுதியிலும் அறிவிக்க, மாவட்ட போலீசார் எதிர்பார்க்கின்றனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad