Header Ads

  • சற்று முன்

    மண்டலநாயனகுண்டா அருகே கோழிப்பண்ணைக்கு தீவைத்து ஒரு லட்சம் மதிப்பிலான கோழிகள் சூறையாடல்!நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு கோரிக்கை



    திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த மண்டலநாயனகுண்டா பகுதியைச் சேர்ந்த நடராஜ் மகன் தினேஷ்குமார் (23) பட்டப்படிப்பை முடித்துவிட்டு தங்களது நிலத்தில் கோழிப்பண்ணை வைத்து வருகிறார்.



    தினேஷ்குமாரின் தந்தை நடராஜ் 2006 ஆம் ஆண்டு அதே பகுதியில் இரண்டரை ஏக்கர் அளவில் நிலத்தை சென்னப்ப நாயுடு என்பவரிடம் வாங்கியுள்ளார். சில காலங்கள் சென்ற நிலையில் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நடராஜ் இறந்துள்ளார். நடராஜ் இறந்த பின்னர் அவருடைய மகன் தினேஷ்குமாரிடம் அந்த இரண்டரை ஏக்கர் நிலத்தில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த ராஜா (47) என்பவர் உங்களுடைய சொத்தில் 45 சென்ட் இடம் எனக்கு சொந்தம் என்று கூறி இவர்களிடம் பலமுறை தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.இதுகுறித்து கந்திலி காவல் நிலையத்தில் தினேஷ்குமார் பலமுறை புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை.


    இந்த நிலையில் கோழி பண்ணைக்கு தீ வைத்து அதன் காரணமாக திரும்பவும் கந்திலி காவல் நிலையத்தில் புகார் அளித்து உரிய இழப்பீடு வாங்கி தரவும் தனக்கு உயிர் பாதுகாப்பும் வேண்டியும் புகார் கொடுத்துள்ளேன் என்றும் தெரிவித்தார். இந்த புகாரின் பெயரில் எனக்கு உரிய நடவடிக்கையும் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வருகிறார்.



    எமது செய்தியாளர் : நித்தியானந்தம் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad