போலீஸாருடன் நல்லுறவில் குறை ஏற்பட்டால் புகார் கூறலாம்... ராணிப்பேட்டை எஸ்பி அழைப்பு
ராணிப்பேட்டை மாவட்ட போலிஸார் பொது மக்களின் சேவகன் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என எஸ்.பி. கூறினார் இதுகுறித்து மயில்வாகனன் கூறியதாவது காவல்துறையினர் இரவு பகல் பாராமல் தங்களது குடும்பத்தை மறந்து காவல்துறையின் மாண்பை நிலைநாட்டும் வகையில் பொது மக்கள் சேவையில் அயராது பாடுபடுகின்றனர் ஒரு சிலர் செய்யும் தவறுகளால் காவல்துறை நற்பெயருக்கு களங்கம் ஏற்படுகிறது ராணிப்பேட்டை மாவட்டத்தில் சிறு தவறு கூட எந்த நிலையிலும் நடைபெறாத வண்ணம் தடுக்க வேண்டும் காவல்துறையினர் பொது மக்களின் சேவகன் என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் பொதுமக்கள் மற்றும் போலீசார் நல்லுறவில் ஏதேனும் குறை ஏற்பட்டால் உடனடியாக 96 77 92 31 00 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம் இவ்வாறு அவர் கூறினார்.
எமது செய்தியாளர் : ஆர்.ஜே.சுரேஷ்குமார் .
கருத்துகள் இல்லை