Header Ads

  • சற்று முன்

    திருப்பத்தூரில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் வாகனம் மோதி பலி..



    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பாலனங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி (45) மற்றும் அதே பகுதியை சேர்ந்த இந்திரஜித் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் திருப்பத்தூரிலிருந்து காய்கறிகள் வாங்கிக் கொண்டு தங்கள் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி அருகே சென்று கொண்டிருந்த பொழுது பின்னாடி வந்த வாகனம் மோதியதில் நிலைதடுமாறி கீழே விழுந்த சுப்பிரமணியன் மீது பின்னால் காய்கறிகள் ஏற்றி வந்த பிக்கப் வாகனம்
    சுப்பிரமணியின் தலையின் மீது ஏறி இறங்கியதில் அவர் சம்பவஇடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்த திருப்பத்தூர் நகர காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சுப்பிரமணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.மதியம் 2 மணி அளவில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் மாலையில் வாகனங்கள் சென்றுவர அனுமதிக்கப்பட்டதே இந்த உயிரிழப்புக்கு காரணம் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.



    எமது செய்தியாளர் : நித்தியானந்தம் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad