திருவண்ணாமலை மாவட்டம் காடகமன் மற்றும் மதுராம்பட்டு கிராமத்தில் உள்ள துரிஞ்சல் ஆற்றில் கொள்ளை போகும் ஆற்று மணல் நடவடிக்கை எடுக்குமா மாவட்டம்
திருவண்ணாமலை மாவட்டம் காடகமன் மற்றும் மதுராம்பட்டு கிராமத்தில் உள்ள துரிஞ்சல் ஆற்றில் கடந்த ஒரு வருடமாக மாட்டு வண்டி மூலம் மணல் கொள்ளை நடைபெற்று கொண்டிருக்கின்றது. இதைப்பற்றி காவல்துறையிடம் காவல்துறை சிஐடி, போன்றவர்களிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இந்த துரிஞ்சல் அற்றினை நம்பி 500 மேற்பட்ட விவசாயம் குடும்பங்கள் விவசாயம் செய்கின்றனர்
பகல் நேரங்களிலேயே மணல் கொள்ளை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது மணல் அள்ளும் நேரத்தில் காவல்நிலையத்தில் புகார் அளித்தால் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை என்று அதை சுற்றியுள்ள பொதுமக்கள் காவல் நிலையம் மீது புகார் கூறுகின்றனர் இதுபோன்று இயற்கை வளங்களை கொள்ளை அடிப்பவர்களை உரிய விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட நபர்களை மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்(SP) இடம் மனு கொடுக்க போவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்
கருத்துகள் இல்லை