Header Ads

  • சற்று முன்

    பழனியில் 60 வயது முதியவருக்கு பாய்ந்தது போக்ஸோ சட்டம் !

    பழனியில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே  ராமநாதன் நகர் பகுதியை சேர்ந்தவர் காமராஜ். அறுபது வயது முதியவரான இவர் அதே பகுதியை சேர்ந்த 10வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார்‌ எழுந்தது. இதனையடுத்து பழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர், சிறுமியிடம் தகாத முறையில் நடந்துகொண்ட முதியவர்  காமராஜ் மீது வழக்குப்பதிவு செய்து  போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யபட்ட சம்பவம் பழனி பகுதியில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    எமது செய்தியாளர் : சரவணகுமார் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad