Header Ads

  • சற்று முன்

    கண்டனர் லாரி மோதி இரண்டு தொழிலாளிகள் பலி ஆற்காடு அருகே நள்ளிரவில் விபத்து



    சென்னையில் இருந்து வேலூர் நோக்கி ஒரு டிப்பர் லாரி ஒன்று புறப்பட்டதே லாரியை சென்னையை சேர்ந்த வேலப்பன்சாவடி சேர்ந்த ராஜாராம் 52 என்பவர் ஓட்டி வந்தார் 

    ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் பைபாஸ் சாலையில் நள்ளிரவு வந்தபோதே லாரி திடீரென பழுதாகி நின்றது இதனால் ராஜாராம் ரத்னகிரி அடுத்த கண்ணியப்படுத்தி சேர்ந்த வினோத் என்பவருக்கு தகவல் கொடுத்தார் இதனால் வினோத் 32 கீழ்மின்னல் பகுதியை சேர்ந்த சுபாஷ் 28 என்பவருடன் சம்பவ இடத்திற்கு சென்றார் அங்கு லாரியின் முன் பகுதியில் மூன்று பேரும் பழுது பார்த்துக் கொண்டிருந்தனர் அப்போது சென்னையிலிருந்து வேலூர் நோக்கி வந்த கண்டெய்னர் லாரி நின்று கொண்டிருந்த டிப்பர் லாரி மீது பின்பகுதியில் பயங்கரமாக மோதியது இதில் டிப்பர் லாரி முன் பக்கமாக நகர்ந்து அங்கு நின்றிருந்த 3 பேர் மீது மோதியது இதில் வினோத் ஆகியோர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர் படுகாயம் அடைந்த டிரைவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று இரண்டு பேரின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் விபத்து நடந்தவுடன் தப்பி ஓடிய கண்டெய்னர் லாரி டிரைவரான விழுப்புரம் மாவட்டம் பரமத்தி கிராமத்தை சேர்ந்த ராஜி 37 என்பவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்....


    எமது செய்தியாளர் : சுரேஷ் குமார் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad