Header Ads

  • சற்று முன்

    கொரோனாவுக்கு சிகிச்சை அளித்த போலி மருத்துவர் கைது - கிளீனிக்கு சீல் வைத்த மருத்துவ குழுவினர்....


    ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை அடுத்த ஜம்புகுளம் பகுதியில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிப்பதாக கூறி மருத்துவம் பார்த்து வந்த போலி மருத்துவரை கைது செய்த மருத்துவ குழுவினர் கிளீனிக்கை பூட்டி சீல் வைத்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

    ஜம்புகுளம் பகுதியில் கொரோனாவுக்கு சிகிச்சை அளிப்பதாக எழுந்த புகாரின்பேரில் மாவட்ட கொரோனா தடுப்பு அதிகாரி பிரகாஷ் ஐயப்பன் தலைமையிலான மருத்துவ குழுவினர் அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர்.


    அப்போது அதே பகுதியை சேர்ந்த ராஜா என்ற நபர் 8 வகுப்பு மட்டும் படித்து, ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தது தெரியவந்துள்ளது.  அதை தொடர்ந்து அவர் பயன்படுத்திய மருந்துகளையும் பறிமுதல் செய்த மருத்துவ அதிகாரிகள் அவர் நடத்திவந்த  கிளீனிக்கை பூட்டி சீல் வைத்தனர். மேலும் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சோளிங்கர் போலீசார் போலி மருத்துவரான ராஜாவை வழக்கு பதிவு விட்டு கைது செய்து சிறையிலடைத்தனர்.


    எமது செய்தியாளர் : ஆர். ஜே. சுரேஷ் குமார் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad