Header Ads

  • சற்று முன்

    மின் கட்டண உயர்வை கண்டித்து வீடுகளில் கறுப்புக்கொடி ஏற்றி ஆர்ப்பாட்டம் ராணிப்பேட்டை எம்எல்ஏ அழைப்பு.....

    அண்ணா திமுக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து கருப்பு கொடி ஏற்றி கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு விடுத்து ராணிப்பேட்டை மாவட்ட திமுக செயலாளர் காந்தி எம்எல்ஏ விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது திமுக தலைவர் மு க ஸ்டாலின் ஆணைக்கிணங்க அண்ணா திமுக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் வரும் 21ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 9 மணிக்கு மாவட்ட நிர்வாகிகள் ஒன்றிய நகர பேரூர் செயலாளர்கள் தலைமை செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள் மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள் ஊராட்சி செயலாளர்கள் வட்டச் செயலாளர்கள் திமுக கழக தோழர்கள் பொது மக்கள் கூட்டணி கட்சியினர் அவர்கள் வீட்டில் கருப்பு கொடி ஏற்றி வீடுகளுக்கு முன் சமூக இடைவெளியுடன் கருப்புக்கொடி ஏந்தி அண்ணா திமுக அரசின் மின் கட்டண உயர்வை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பும்படி கேட்டுக் கொள்கிறேன் இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார்.


    எமது செய்தியாளர் : ஆர்.ஜே. சுரேஷ் குமார் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad