ராணிப்பேட்டையில் இன்று ஆவின் பால் முகவர்கள் உள்ளிருப்பு போராட்டம்......
ராணிப்பேட்டை கலெக்டர் திவ்யதர்சினி ஒருங்கிணைந்த ஆவின் பால் முகவர்கள் நலச்சங்க தலைவர் மீனாட்சி சுந்தரம் தலைமையில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது...வாலாஜா ஆற்காடு ராணிப்பேட்டை ஒருங்கிணைந்த ஆவின் பால் முகவர்கள் நலச்சங்கம் சேர்ந்த ரத்தினகிரி விசாரம் திமிரி அம்மோர் நரசிங்கபுரம் சிப்காட் பாரதிநகர் லாலாப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 65 க்கும் மேற்பட்டவர்கள் அலுவலகத்தில் பணம் செலுத்தி பால் விநியோகம் செய்து வருகிறோம் தற்போது ஆற்காடு ராணிப்பேட்டை வாலாஜா உட்பட்ட பகுதிகளில் ஆவின் நிறுவனம் புதிய பால் மொத்த விற்பனையாளர் நியமனம் செய்வதாக கேள்விப்பட்டோம்
அவ்வாறு மொத்த விற்பனையாளர் நியமனம் செய்தால் எங்கள் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் ஆகவே தங்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வண்ணம் மொத்த விற்பனையாளர் நியமனத்தை கைவிட்டு தற்போதைய முறையிலேயே ஆவின் பால் தொடர்ந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது இந்நிலையில் ராணிப்பேட்டை கிருஷ்ணகிரி சாலையில் உள்ள ஆவின் அலுவலகத்திற்கு இன்றே வந்த முகவர்கள் அலுவலக வளாகத்தில் திடீரென உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதுகுறித்து நிர்வாகிகள் கூறுகையில் எங்கள் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் நாளை பால் சப்ளை செய்ய மாட்டோம் என்றனர்
எமது செய்தியாளர் : சுரேஷ் குமார்
கருத்துகள் இல்லை