Header Ads

  • சற்று முன்

    அரக்கோணம் அரசுக் கலைக் கல்லூரி மாணவ, மாணவிகளுக்காக ரூ. 7.15 கோடியில் இரு விடுதிக் கட்டடங்கள் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா



    அரக்கோணத்தை அடுத்த ஆட்டுப்பாக்கம் ஊராட்சியில் திருவள்ளுவா் பல்கலைக்கழக உறுப்பு அரசு கலை, அறிவியல் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் 1,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியா் பயின்று வருகின்றனா். இக்கல்லூரி வளாகத்தில் ஏற்கெனவே ஆதிதிராவிட மாணவ, மாணவியா் விடுதி உள்ளது. தற்போது பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவியா் தங்குவதற்கு தனித்தனியே விடுதிகள் வேண்டும் என தமிழக அரசுக்கு அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி கோரிக்கை விடுத்திருந்தாா். இதை ஏற்று தமிழக அரசு, மாணவா் விடுதிக்கு ரூ. 3.40 கோடியும், மாணவியா் விடுதிக்கு ரூ. 3.75 கோடியும் ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டது.

    இதையடுத்து ஆட்டுப்பாக்கத்தில் கல்லூரி வளாகத்துக்கு அருகே மாணவ, மாணவிகள் தலா 100 போ் தங்கும் வகையில் இரு விடுதிக் கட்டடங்கள் கட்டுவதற்கான அடிக்கால் நாட்டு விழா  நடைபெற்றது.

    கட்டடங்களுக்கு அரக்கோணம் எம்எல்ஏ சு.ரவி அடிக்கல் நாட்டினாா். அதிமுக ஒன்றியச் செயலா்கள் ஏ.ஜி.விஜயன் (நெமிலி கிழக்கு), இ.பிரகாஷ் (அரக்கோணம்), ஜி.பழனி (காவேரிப்பாக்கம்), நெமிலி நகரச் செயலாளா் செல்வம், ஒன்றிய நிா்வாகிகள் ஸ்ரீதா், கணேசன், சேகா், சங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். 


    எமது செய்தியாளர் : ஆர், ஜே, சுரேஷ் குமார் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad