ஜோலார்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆயுர்வேத மருத்துவ பிரிவு சார்பாக கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
ஜோலார்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆயுர்வேத மருத்துவ பிரிவு சார்பாக பொதுமக்கள் வைரஸ் பாதிப்பிலிருந்து தம்மைத் தாமே தனிமைப்படுத்தி சமூக இடைவெளியுடன் விழிப்போடு வீட்டில் இருக்க வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்தி கபசுர நீர் வழங்கினர்.
கடும் சவால்களுக்கு இடையே கடுமையான பணிச் சூழலும் கடமை தவறாது பணிபுரிந்து வரும் முக்கிய துறைகளான காவல்துறை மற்றும் மின்சாரத்துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு இன்று ஆயுர்வேத மருத்துவ பிரிவு சார்பில் ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் அலுவலர்கள், காவலர்கள் மற்றும் மின்சாரத்துறை, அம்மா உணவகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு கபசுர நீர் ஆயுர்வேத மருத்துவர் திரு ஜெய்கணேஷ் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்கள் மூலம் வழங்கப்பட்டது மேலும் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு கபசுர நீர் வழங்கப்படுமென ஆயுர்வேத மருத்துவர் கூறினார்
கருத்துகள் இல்லை