Header Ads

  • சற்று முன்

    தளபதி விஜய் மக்கள் இயக்கம் கோவில்பட்டி நகர தலைமை சார்பில் கரோனா நிவாரண வழங்கப்பட்டது.உதவிகள்



    தளபதி விஜய் மக்கள் இயக்கம் கோவில்பட்டி நகர தலைமை சார்பில் கரோனா ஊரடங்கு உத்தரவினால் வாழ்வாதாரம் இழந்து பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரண உதவிகள் இன்று வழங்கப்பட்டது.


    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகர தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நகர தலைவர் வழக்கறிஞர் பழனிகுமார் தலைமையில் புதுக்கிராமம் கூசாலிப்பட்டி ஊரணி தெரு மறவர் காலனி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கண்பார்வையற்றோர் மாற்றுத்திறனாளிகள் கூலித்தொழிலாளர்கள் முதியோர்கள் உள்ளிட்ட 200 நபர்களுக்கு அவர்களது வீடுகளுக்கு நேரில் சென்று அரிசி பருப்பு சமையல் எண்ணெய் காய்கறிகள் மளிகை பொருட்கள் முகக் கவசங்கள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் தளபதி விஜய் மக்கள் இயக்க துணைத் தலைவர் பாலமுருகன் பொருளாளர் பொன் செந்தில்குமார் இணை செயலாளர்  ஆறுமுகம், ஜான் ஜெயராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad