Header Ads

  • சற்று முன்

    கொரனோ தொற்று நோய் பாதிப்பில் தமிழகத்தில் இரண்டாவது உயிர் பலி !!


    டெல்லி மாநாட்டிற்குச் சென்று தமிழகம் திரும்பிய விழுப்புரத்தைச் சேர்ந்த 51 வயது நபர் ஒருவர் இன்று காலை உயிரிழந்ததாகத் தமிழக அரசின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட அவர், விழுப்புரம் மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். நேற்று இரவு அவருக்கு மூச்சுத் திணறல் அதிகமாகி, இன்று காலை 7.44 மணிக்கு அவர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே மதுரையில் ஒருவர் இறந்துள்ள நிலையில், இது கொரோனாவால் தமிழகத்தில் உண்டாகும் இரண்டாவது மரணமாகும்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad