Header Ads

  • சற்று முன்

    கோவில்பட்டி அருகே காட்டு பகுதியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு  பெண் படுகொலை - போலீசார் விசாரணை


    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கீழஈரால்  பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் அதே கிராமத்தை சேர்ந்த காளியப்பன் என்பவரது மனைவி பாப்பா(60) என்பவர் மர்ம நபர்கள் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து விட்டு தப்பியோட்டம் - எட்டயபுரம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள    எட்டையபுரம்  கீழ ஈரால் புது காலணி தெருவை சேர்ந்த காளியப்பன் மனைவி பாப்பா(60). இவர்களுக்கு திருமணமாகிய 5 பெண் குழந்தைகள் உள்ளனர்.  ஞாயிற்றுக்கிழமை  காலை மதுரை தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாதயாத்திரை பக்தர்கள் தங்க கூடிய மண்டபத்திற்கு பின்புறமுள்ள  காட்டு பகுதிக்கு பருத்தி எடுக்க சென்றுள்ளார். மாலை வரை பாப்பா வீடு திரும்ப வில்லை. இதனால் இவரது உறவினர்கள் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்து காட்டு பகுதிக்கு சென்று தேடியுள்ளனர். அங்குள்ள வரப்பு ஒரத்தில் ஆடைகள் கலைந்த நிலையில் புதர் பகுதியில் முகம் சிதைக்கப்பட்டு பாப்பா பிணமாக கிடந்துள்ளார். உறவினர்கள் இது குறித்த தகவலை எட்டையபுரம் போலிசாருக்கு தெரிவித்துள்ளனர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த விளாத்திகுளம் டி.எஸ்.பி. பீர்முகைதீன் மற்றும்  எட்டயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலா ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும்ஸபாப்பா உடலை போலீசார்  மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார். பாப்பா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad