Header Ads

  • சற்று முன்

    விளாத்திகுளத்தில் மாவட்ட அளவிலான கால்பந்தாட்ட போட்டி


    விளாத்திகுளத்தில் வி.கே.எம் .அதெலட் நண்பர்கள் குழு சார்பாக விளாத்திகுளம் அம்பாள்நகரில் உள்ள அம்பாள் மெட்ரிக்குலேசன் பள்ளி வளாகத்தில் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி நடைபெற்றது.இந்தப் போட்டியில் தூத்துக்குடி, திருநெல்வேலி, இராமநாதபுரம், விருதுநகர், மாவட்டங்களை சேர்ந்த 18 கால்பந்தாட்ட அணியினர் கலந்து கொண்டனர்.இரண்டு நாட்களாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் அரையிறுதியில் வி கே எம் பாய்ஸ் அணியினரும் ஜமீன் செங்கப்படை அணியினரும் மோதினர்.இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் சூரப்பநாயக்கன்பட்டி அணியினரும் கோவில்பட்டி அணியினரும் மோதினர்.இதில் வி கே எம் பாய்ஸ் அணியினரும்,சூரப்ப நாயக்கன்பட்டி அணியினரும் வெற்றி பெற்று இறுதி போட்டியில் விளையாடினர்.இதில் சூரப்பநாயக்கன்பட்டி அணியினர் இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வெற்றி பெற்று முதல் பரிசை தட்டிச் சென்றனர் .இந்த போட்டியில் இரண்டாவது பரிசை வி கே எம் கிரிக்கெட் அணியினரும் ,மூன்றாவது பரிசை கோவில்பட்டி அணியினரும், நான்காவது பரிசை ஜமீன் செங்கப்படை அணியினரும் வென்றனர்.இந்த ஆட்டத்தில் சிறந்த ஆட்டக்காரராக சூரப்பநாயக்கன்பட்டி அணியைச் சேர்ந்த பார்த்திபன் தேர்வு செய்யப்பட்டார்.வெற்றி பெற்றவர்களுக்கு விளாத்திகுளம் அதெலட் நண்பர்கள் குழு சார்பாக பரிசுகள் வழங்கப்பட்டது

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad