தென்மண்டல பள்ளி, கல்லூரி மாணவர், மாணவிகளுக்கான வில்வித்தை போட்டி
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் தென்மண்டல பள்ளி, கல்லூரி மாணவர், மாணவிகளுக்கான வில்வித்தை போட்டிகள் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி காமராஜ் இண்டர்நேஷனல் அகாதெமி சிபிஎஸ்இ பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற தென்மண்டல பள்ளி, கல்லூரி மாணவர், மாணவிகளுக்கான வில்வித்தை போட்டி நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் ஜெயகுமார்,போட்டிகளை தொடங்கி வைத்தார்.போட்டியில், தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, விருதுநகர், மதுரை, நாமக்கல், சேலம், சிவகங்கை உள்பட 15 மாவட்டங்களைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவர், மாணவிகள் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதில் 8 வயதுக்கு உள்பட்டோர், 10 வயது, 12 வயது, 14 வயது, 17 வயது, 19 வயதுக்கு உள்பட்டோர் மற்றும் சீனியர், குழு என 8 பிரிவுகளில் வில்வித்தை போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் முதல் 3 இடங்களில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை ரூரல் கேம்ஸ் போர்டு ஆப் இந்தியா பொதுசெயலர் மற்றும் நிறுவனர் கேசவன் பரிசுகளை வழங்கினார்
கருத்துகள் இல்லை