திருவண்ணாமலையில் புண்ணியகால பிரம்மோற்சவ விழா கொடியோற்றம் இன்று நடைபெற்றது.
பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும்,நினைத்தாலே முக்தியளிக்கும் தலமாக விளங்கும் திருவண்ணாமலையில் உள்ள புகழ் மிக்க அண்ணாமலையார் கோயிலில் உத்ராயண புண்ணியகால பிரம்மோற்சவ விழா கொடியோற்றம் இன்று நடைபெற்றது.
வைச தலங்களில் புகழ் பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் சித்திரை முதல் பங்குனி வரை உள்ள 12 மாதங்களும் பல விழாக்கள் நடைபெறும்.இதில் முக்கியமானது வைகுண்ட வாசல் திறப்பு,ஆருத்ரா தரிசனம்,சித்ரா பவுர்ணமி விழா,ஆனி மாத கொடியேற்றம், ஆனி திருமஞ்சனம், உத்ராயன மற்றும் தட்சிணாயன புண்ணிய கால பிரம்மோற்சவம், ஆடிப்புரம், கார்த்திகை தீபம்,மார்கழி மாத கொடியேற்றம் ஆகியவை மிக முக்கியமானதாகவும்.
12 மாதங்களில் சூரியன் ஆடி மாதம் முதல் மார்கழி மாதம் வரை தெற்கு நோக்கியும்,தை மாதம் முதல் ஆனி மாதம் வரை சூரியன் வடக்கு நோக்கியம் நகரும் காலமாக ஆகம நூல்கள் கூறுகின்றது.சூரியன் வடக்கு நோக்கி நகரும் காலமான தை மாதம் முதல் ஆனி மாதம் வரை உள்ள காலம் உத்ராயண புண்ணிய காலமாகும்.ஆடி முதல் மார்கழி வரை உள்ள சூரியன் தெற்கு நோக்கி நகரும் காலம் தட்சிணாயிண புண்ணிய காலமாகும். உத்ராயண புண்ணிய காலம் இன்று தொடங்குவதை முன்னிட்டு உத்ராயன புண்ணியகால பிரம்மோற்சவ விழா இன்று அண்ணாமலையார் திருக்கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் விநாயகர், சந்திரசேகரர், அம்பாள் கோயில் கொடிமரத்தின் அருகே எழுந்தருளினார்.இன்று காலை 6.30 மணியளவில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கொடியேற்றம் நடைபெற்றது.முன்னதாக அதிகாலையில் சுவாமி மற்றும் அம்மாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.
இன்று முதல் 10 நாட்கள் காலை மற்றும் இரவில் விநாயகர், சந்திரசேகரர், அம்பாள் ஆகியோரின் மாடவீதியுலா நடைபெறும். தை திங்கள் முதல் நாள் ஜனவரி 15ம் தேதி அன்று திருவண்ணாமலை தாமரை குளத்தில் அண்ணாமலையாரின் தீர்த்தவாரி நடைபெறும்.
கருத்துகள் இல்லை