திருவாடானை ஊராட்சியில் பன்றிகளால் நோய் தொற்று அபாயம்,
திருவாடானை தாலுகாவில் சட்டவிரோதமாக பன்றிகளை வளர்ப்பதால் நோய் தொற்று அபாயம் உள்ளது எனவே ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொது மக்கள் கோரிக்கை ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, திருவாடானையானது தாலுகாவின் தலைமையிடமாக உள்ளது. இந்த ஊராட்சியில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள். இங்கு பொது மக்கள் அதிகம் நடமாட்டம் இல்லாத சுடு காட்டுப்பகுதியில் மறைமுகமாக கூண்டு அமைத்து சமூக விரோதிகள் பன்றிகள வளர்க்கின்றனர். மேலும் பன்றிகள் வளர்க்கும் இடத்திற்கு இருகில் அரசு கல்லூரி உள்ளது. இப்படி பன்றிகளை வளர்ப்பதால் இப்பகுதியில் சுகாதார கேடு ஏற்கடுவதோடு துற்நாற்றமும் வீசுகிறது. இறந்தவர்களை அடக்கம் செய்ய நிற்க கூட முடியாத அளவிற்கு துற்நாற்றம் வீசுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே ஊராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுத்து பன்றிகளை வளப்போர் மீது சட்ட நடவடிக்கை எடுத்து அப்புறப்படுத்த வேண்டும் என கோரக்கை வைத்தனர்.
கருத்துகள் இல்லை