திருவண்ணாமலையில் சொர்க்க வாசல் நடை திறப்பு ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக அண்ணாமலையார் கோவிலில் இன்று அதிகாலை நடை திறக்கப்பட்டது.
அண்ணாமலையார் பின்புறமுள்ள வேணுகோபால் சன்னதியில் சிறப்பு அபிஷேக அலங்காரங்கள் செய்து வேணுகோபால் மற்றும் மகாலட்சுமி சன்னதிக்கும் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க மகா தீபாராதனை நடைபெற்றது அதனைத் தொடர்ந்து சைவத் திருத்தலங்களில் சொர்க்கவாசல் திறப்பு என்ற நிகழ்வு திருவண்ணாமலையில் மட்டும்தான் நடைபெறும்.
அதனை தொடர்ந்து இரண்டாம் பிரகாரத்தில் உள்ள பரமபத வாயில் என்று அழைக்கப்படுகின்ற சொர்க்க வாசல் கதவினை இளவரசு பட்டம் சீனிவாச சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜை செய்து பரமபத வாசல் திறக்கப்பட்டது அதனை தொடர்ந்து பரமபதவாசல் வழியாக ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என்ற கோசத்துடன் பக்தியுடன் சென்றார்கள் இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அண்ணாமலையார் மற்றும் வேணுகோபால் சாமி தரிசனம் செய்தார்கள்
கருத்துகள் இல்லை