Header Ads

  • சற்று முன்

    ஆட்சியில் இருந்தால் ஒன்று, இல்லாவிட்டால் ஒன்று என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு - அமைச்சர் கடம்பூர்.செ.ராஜூ


    தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு பேரூராட்சியில் மூலதன மானிய நிதி திட்டத்தில் ரூ.1 கோடியில்சந்தை மேம்பாட்டு பணிகள் தொடக்க விழாவும், நபார்டு திட்டத்தில் ரூ.65 லட்சத்தில் வடக்கு சுப்பிரமணியபுரம் தார்ச்சாலை பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவும் நடைபெற்றது. 

    இதில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பணிகளை தொடங்கி வைத்தார். மேலும் அம்மா இருசக்கர வாகன திட்டத்தில் 3 பெண்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கினார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது, தஞ்சை பெருவுடையார் கோயில் கும்பாபிஷேகம் ஆகம விதிகளின்படி நடைபெறும் என முதல்வர் தெரிவித்துள்ளார். 


    இருமொழிக் கொள்கை என்ற அண்ணாவின் கொள்கையில் அதிமுக அரசு உறுதியாக உள்ளது. ஆட்சியில் இருந்தால் ஒன்று இல்லாவிட்டால் ஒன்று என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு.உலகில் எந்த மூலையில் தமிழர்கள் பாதிக்கப்பட்டாலும் அவர்களை காப்பாற்ற அதிமுக அரசு நடவடிக்கை எடுக்கும். கரோனா வைரஸ் தாக்கம் உள்ள சீனா நாட்டில் தமிழர்கள் இருந்தால் அவர்களை மீட்க மத்திய அரசு மூலம் தமிழக அரசு முயற்சிகள் மேற்கொள்ளும், என்றார் அவர்.விழாவில் கோட்டாட்சியர் விஜயா மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad