திருவண்ணாமலை மாவட்டத்தில் மணற் கொள்ளையில் ஈடுபட்ட மூவர் கைது !
திருவண்ணாமலை மாவட்டம் செங்கதின் வலையாம்பட்டு சென்னசமுத்திரம் பீட் யை சேர்ந்து செல்வம் வயது 37, தினேஷ் வயது 21, காத்தாடி வயது 30 ஆகிய மூவரும் அதிகாலை 5:30 மணி அளவில் மாட்டு வண்டியை பயன்படுத்தி அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட மணல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர், இதனைத்தொடர்ந்து மாவட்ட வன அலுவலருக்கு கிடைத்த இரகசிய தகவலின் படி வனசரகர் ராமநாதன் தலைமையில் வனகர்கள் வெங்கட்ராமன், ரேவதி, விவேகானந்தன், வனக்காப்பாளர்கள் செல்வராஜ், மோகன், சிகே வேலு, செல்லையன், ஜெயவேல் ஆகியோர் கொண்ட தனிக்குழு மணல் கொள்ளையில் ஈடுபட்ட மூவரையும் சுற்றிவளைத்து மணலுடன் மாட்டுவண்டியை பறிமுதல் செய்து வந்து, செல்வம், தினேஷ், காத்தாடி ஆகிய 3வர் மீதும் மணல் திருட்டு வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்திற்கு அழைத்து சென்று நீதிபதியிடம் ஒப்படைத்தார்கள்
கருத்துகள் இல்லை