Header Ads

  • சற்று முன்

    திருவண்ணாமலை மாவட்டம் ஜூனியர் ஆண்கள் கபடி சாம்பியன்ஷிப் போட்டி செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.


    திருவண்ணாமலை மாவட்டம் அமெச்சூர் கபடி கழகத்தின் சார்பில் மாவட்ட அளவிலான ஜூனியர் ஆண்கள் கபடி சாம்பியன்ஷிப் போட்டி செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டம் ,செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் திருவண்ணாமலை மாவட்டம் அமெச்சூர் கபடி கழகத்தின் சார்பில் மாவட்ட அளவிலான சீனியர் ஆண்கள் கபட சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது.

     இந்தப் போட்டிக்கு செங்கம் திமுக சட்டமன்ற உறுப்பினர் மு பே கிரி தலைமை தாங்கினார்,மகரிஷி மேனிலைப் பள்ளி தாளாளர் மனோகரன் முன்னிலை வகித்தார், செல்வம் வழக்கறிஞர் போட்டியை தொடங்கி வைத்தார்.கபடிப் போட்டியில்திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. கலந்து கொண்ட அனைத்து அனைவரும் அவர்களின் முழு திறமைகளை வெளிப்படுத்தி விளையாடினர், நான்கு சுற்றுகளாக நடைபெற்ற இப்போட்டியில் புள்ளிகளின் அடிப்படையில்,முதல் பரிசு கே எஸ் சி ஆதனூர் ஆரணி அணியும் இரண்டாம் பரிசு போளூர் லாடா வரம் அணியும், மூன்றாம் பரிசு போளூர் வடுக சாத்தூர் அணியும், நான்காம் பரிசு செய்யார் அணியும் வென்றது.

    நமது தினக்கதிர் நாளிதழின் திருவண்ணாமலை மாவட்ட செய்தியாளர் குருபரன் விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் விதமாக இந்தப் போட்டியின் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளையும் கோப்பையும், வழங்கி விளையாட்டு வீரர்களுக்கு தனது பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad