Header Ads

  • சற்று முன்

    மயிலாடுதுறையில் மக்களை மிரட்டும் பாதாள சாக்கடை திட்டம்: நடவடிக்கை எடுக்குமா நகராட்சி?


    மயிலாடுதுறை நகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை திட்டம் தொடங்கிய போது மகிழ்ச்சியடைந்த மக்கள் தற்போது நகரின் பல்வேறு இடங்களில் ஏற்படும் பாதாள சாக்கடை குழாய் உடைப்பு, அதனால் ஏற்படும் மிகப்பெரிய பள்ளங்கள், சாலைகளில் ஓடும் கழிவுநீரால் ஏற்படும் சுகாதார சீர்கேடு மற்றும் தொற்றுநோய் பரவும்  ஆபத்து,போக்குவரத்து நெரிசல், துர்நாற்றம் வீசும் அவலம் போன்ற பிரச்சனைகளால் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர். நாளுக்கு நாள் மக்களை பாடாய்படுத்தி வரும் பாதாள சாக்கடை திட்ட பராமரிப்பு பணிகளை உடனடியாக மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மயிலாடுதுறையில் காவிரி ஆறு மற்றும் பழங்காவிரியில் பொதுமக்களால் சாக்கடை நீர் விடப்பட்டு வந்த நிலையில் இதற்கு தீர்வுகாண வேண்டி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து (1996 – 2001) திமுக ஆட்சி காலத்தில் மத்திய அரசு நிதி  ரூ.42 கோடி திட்ட மதிப்பீட்டில் மயிலாடுதுறைபாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த திட்டம் தயாரிக்கப்பட்டு 2003 – ஆம் ஆண்டு பணிகள் தொடங்கப்பட்டது.



    செய்தியாளர் : மயிலாடுதுறை - வினோத் 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad