Header Ads

  • சற்று முன்

    எலிக்கு விரித்த மின்வேலியில் விவசாயி சிக்கி மரணமடைந்தார்


    ஆரணியை அடுத்த நெசல் புதுப்பட்டு காலனியை சேர்ந்தவர் பரமாத்மா (வயது 70), விவசாயி. அவருடைய மனைவி பார்வதி. இவர்களுக்கு பாஸ்கரன், பார்த்தீபன் என 2 மகன்களும், உஷாராணி என்ற மகளும் உள்ளனர். பரமாத்மாவுக்கு சொந்தமான நிலம் ஆகாரம் ஊராட்சி பல்லாந்தாங்கல் ஏரிக்கரை அருகே உள்ளது. இவரது நிலத்தில் நெல் பயிரிடப்பட்டு உள்ளது. இரவு நேரங்களில் நெற்பயிர்களை எலி கடித்து நாசம் செய்துவிடுவதால் தினமும் இரவு நேரத்தில் எலிக்காக மின்வேலி அமைத்து காலையில் அதனை பரமாத்மா அகற்றிவிடுவார்.
    இந்த நிலையில் நேற்று காலை நீண்ட நேரமாகியும் பரமாத்மா நிலத்தில் இருந்து வீட்டிற்கு செல்லவில்லை. இதனால் மனைவி பார்வதி மற்றும் மகன் பார்த்தீபன் ஆகியோர் நிலத்திற்கு சென்றனர். அப்போது பரமாத்மா மின்வேலியில் சிக்கி மயங்கிய நிலையில் கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து அவரை சிகிச்சைக்காக ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து ஆரணி தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இனஸ்பெக்டர் (பொறுப்பு) சாலமோன்ராஜா வழக்குப்பதிவு செய்து, பரமாத்மா உடலை பிரேத பரிசோதனைக்காக ஆரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். தனது நிலத்தில் அமைத்த மின்வேலியிலேயே சிக்கி விவசாயி உயிர் இழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


    செய்தியாளர் : திருவண்ணாமலை - மூர்த்தி 

    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad