தூத்துக்குடியில் தொடரும் படு கொலைகள் : ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் கண்டனம் !
ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது.
தூத்துக்குடி , சிவந்தாகுளம் 2வது தெருவைச் சேர்ந்த முருகேசன். அவர்கள் மோட்டார் வாகனத்தில் அதி வேகமாக சென்ற மணிகன்டனை தடுத்து நிறுத்தி அறிவுரை கூறியதற்க்காக ஆத்திரடைந்த மணிகன்டன் நண்பர்களை அழைத்து வந்து முருகேசன். விவேக். ஆகிய இருவரையும் நேற்று மதியம் 3 மணியளவில் ஏழு பேர் கொண்ட கும்பல் சரமாரியாக அரிவாளில் வெட்டி படு கொலை செய்யபட்டதை ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் மிகவும் வண்மையாக கண்டிக்கிறது.
தூத்துக்குடியில் 12மணி நேரத்தில் முருகேசன் . விவேக் .சொரிமுத்து . ஆகிய 3 படு கொலை சம்பவங்கள் பரப்பரைப்பையும் மக்களிடையே பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது . இந்த படு கொலை செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் மென ஜனநாயக மக்கள் எழுச்சி கழகம் வலியுத்துகிறது. முருகேசன். விவேக். சொரிமுத்து. மூவரையும் இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்களையும் அனுதாபங்களையும் ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் தெரிவித்து கொள்கிறோம். எனவே : தூத்துக்குடியில் படு கொலைகள் தொடர்ந்த வண்ணமாக உள்ளது. இது போண்ற சம்பவங்கள் நடை பெறாமல் தடுக்கும் வகையில் ரவுடிகளை குண்டர் சட்டத்தில் கைது செய்ய காவல் துறை மாவட்ட கண்காணிப்பாளர் அருண் பால கோபாலன் அவர்கள் உடனடியாக உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் சார்பில் வலியுறுத்தி கேட்டு கொள்கிறோம். என்று அக்கட்சியின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் கூறியுள்ளார்.
கருத்துகள் இல்லை