கொலை வழக்கில் ஈடுபட்ட நான்கு நபர்கள் மீது “குண்டர்” தடுப்பு சட்டம் **
மதுரை மாநகர் செல்லூர் மீனாம்பாள்புரத்தைச் சேர்ந்த ரவி என்பவருடைய மகன் பிரபு 19/2019, பூமி உருண்டை தெருவைச் சேர்ந்த சுரேஷ் என்பவருடைய மகன் தினேஷ்குமார் 25/2019, B.B.குளத்தைச் சேர்ந்த கருப்பையா என்பவருடைய மகன் சிவமணி 23/2019 மற்றும் சொக்கிகுளத்தைச் சேர்ந்த மாரிமுத்து என்பவருடைய மகன் போதைகுமார் என்ற ராம்குமார் 21/2019 ஆகிய நான்கு நபர்களும் மதுரை மாநகரில் கொலை வழக்குகளில் ஈடுபட்டுவந்தவர்களின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.டேவிட்சன் தேவாசீர்வாதம்,IPS, அவர்கள் உத்தரவுப்படி இன்று (20.09.2019) “குண்டர்” தடுப்பு சட்டத்தின் கீழ் நான்கு நபர்களும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
செய்தியாளர் : வி காளமேகம் - மதுரை மாவட்டம்
கருத்துகள் இல்லை