Header Ads

  • சற்று முன்

    போளூர் ரயில்வே கேட் தற்காலிகமாக திறக்கப்பட்டுள்ளது


    கடந்த ஜனவரி மாதம் முதல் போளூர் ரயில்வே கேட் மேம்பாலப் பணி நடை பெற்றுவருகிறது . மாற்றுப்பாதை தனியார் நிலத்தின் வழியேயும், ஏரிக்கால்வாய் வழியாகவும் அமைக்கப்பட்டதால் மழை காலங்களில் வாகன ஓட்டிகளுக்கு பெரும் சிரமம் ஆளாகி வேண்டியுள்ளது. நான்கு சக்கர வாகனம் பை பாஸ் வழியாக ஐந்து கிலோமீட்டர் சுற்றி சென்று விடுகின்றனர். ஆனால் இரு சக்கர வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாக வேண்டியுள்ளது. ஒரு சிலர் தங்கள் இரு சக்கர வாகனத்தை மூடப்பட்ட ரயில்வே கேட் அருகே சாய்த்து அந்த பக்கம் செல்கின்றனர். ஆறு மாததிற்கு மேல் ரயில்வே மேம்பால பணி தொடர்ந்து நடைபெற்று வருவதால் பொது மக்கள் நலம் கருதி நேற்று மதியம் திடீரென கேட் திறக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு திறந்தனர்  ஞாயிறு முதல் கேட் எப்போதும் போல் திறந்திருக்கும். ரயில் வரும் நேரங்களில் கேட் மூடப்படும். ஆனால் இந்த வழியே ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள் மட்டுமே செல்லும் அளவிற்கு வழி ஏற்படுத்தப்படும்.

    தற்போது நெடுஞ்சாலை துறை மூலம் இருபக்கமும் தூண்கள் அமைக்கும் பணி மட்டுமே முடிவடைந்த நிலையில்  ரயில்வே துறை மூலம் கேட்டின் இரண்டு புறமும் அமைக்கப்பட  வேண்டிய தூண்கள் இன்னும் வேலை ஆரம்பிக்கப்படாமல் உள்ளது. அதேநேரத்தில் கேட்டினை திறப்பதற்கு ரயில்வே துறையின் அனுமதி கிடைத்துள்ளதாகவும், நேற்று  பரிசோதனைக்காக திறந்ததாகவும், வரும் ஞாயிறு  முதல் கேட் திறந்தே இருக்கும் என்றும் ரயில்வே அதிகாரி ஒருவர் தெரிவிதார். அவர் மேலும் தெரிவிக்கையில் தூண்கள் அமைக்கும் பணிகள் முடிந்து மேலே பாலம் அமைக்கும் போதுதான் மறுபடியும் கேட் அடைக்கப்படும் என்றும்
    தெரிவித்தார். இருசக்கர வாகனங்கள் செல்வதற்கு வசதியாக ரயில்வே கேட் மறுபடியும் திறக்கப்பட்டது போளூர் மற்றும் ஹவுசிங் போர்டில் வசிக்கும்  பொதுமக்களை
    மகிழ்ச்சியில்  ஆழ்த்தியுள்ளது



    செய்தியாளர் : திருவண்ணாமலை - மூர்த்தி






    கருத்துகள் இல்லை

    Post Top Ad

    Post Bottom Ad