திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் பகுதியில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை, பலத்த மழையால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சி.திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கீழ்பெண்ணாத்தூர் பகுதியில் திடீரென மாலை 7 மணி அளவில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் தெருக்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.நீர்நிலைகளில் தண்ணீர் படிப்படியாக நிரம்பி வருவதால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பலத்த மழை மற்றும் இடி மின்னல் காரணமாக குடியிருப்பு பகுதிகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மேலும் காரில் சென்றவர்கள் அங்கங்கே நின்று மழை நிற்கும் வரை ஒரு இடத்தில் நின்று பின்னர் கிளம்பி சென்றனர்
கருத்துகள் இல்லை